ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம்!

1AFB395B-57BE-43B1-9976-A4D2FB1EABA4_cx0_cy12_cw0_mw1024_s_n_r1நியூயார்க்: ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நியூயார்க்கில் உள்ள அதன் தலைமை அலுவலகம் முன் இலங்கை தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரி்க்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கனடாவில் இருந்து பேருந்துகள் மூலமும் தமிழர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

ராஜபக்சே பேசுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட ஐந்து அம்ச கோரிக்கைகள் இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனார்.

தமிழர்களின் போராட்டம் காரணமாக ஐ.நா. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.